தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை விளக்கும் கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கல்வி அமைச்சகப் பதிவுக்குப் பதிலளித்துப் பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
“தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியக் கல்வியை எவ்வாறு முழுமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்திற்குத் தயாரானதாகவும் மாற்றியுள்ளது என்பதை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் @dpradhanbjp விளக்குகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அதன் தாக்கம் வகுப்பறைகளில் தெளிவாகத் தெரியும் என்று அவர் மேலும் கூறுகிறார்.”
